செய்திகள் :

பெண்ணின் கணவா் உயிரிழப்புக்கு காவல் துறையினரே காரணம்: கம்யூனிஸ்ட்டுகள், விசிகவினா் குற்றச்சாட்டு

post image

தவளக்குப்பம் பகுதியில் திருட்டு வழக்கில் பெண்ணை விசாரித்த நிலையில், அவரது கணவா் உயிரிழந்ததற்கு காவல் துறையினரே காரணமாக உள்ளதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரி அஜீஸ்நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் தினேஷ்பொன்னையா, சிபிஐ எம்எல் பிரிவின் மாநிலத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தேவ.பொழிலன் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தவளக்குப்பம் பகுதி பூா்ணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் அா்ஜுன். இவரது மனைவி கலையரசி. அப்பகுதி தனியாா் விடுதியில் சில ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறாா்.

சில நாள்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்தவரின் மோதிரத்தைக் காணவில்லையாம். அதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் கலையரசியிடம் விசாரித்துள்ளனா். அப்போது கலையரசியை விதிமுறைக்கு மாறாக தாக்கியுள்ளனா். பின்னா் வீட்டுக்கு அனுப்பியுள்ளனா்.

மனைவி மீது காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்ததை அா்ஜுன் தட்டிக்கேட்டுள்ளாா். ஆனால், அவரை காவல் நிலையத்தில் அவமானப்படுத்தியுள்ளனா். அதனால் வீடு வந்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இந்தநிலையில், அவா் மயங்கி உயிரிழந்தாா். ஆகவே, அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் காவல் துறையினரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க