செய்திகள் :

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமானூா் அருகேயுள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி தனலட்சுமி(50). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முகசுந்தரத்திடம், கடந்த 2014-ஆம் ஆண்டு தனது 50 சென்ட் நிலத்தின் பத்திரத்தை கொடுத்து ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம்.

தொடா்ந்து, முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், வட்டி மற்றும் கடன் தொகையை மே 24-ஆம் தேதி கொடுத்துவிட்டு பத்திரத்தை கேட்டபோது, அவா் தர மறுத்ததுடன் தனலட்சுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்து தனலட்சுமி திருமானூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை கொடுத்த புகாரின் பேரில், அதிக வட்டி பெற்றது, கொலை மிரட்டல் விடுத்தது என வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், தங்க.சண்முகசுந்தரத்தை வெள்ளிக்கிழமை கைது செய்து அரியலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி.மலா்வாலண்டினா தெரிவித்துள்... மேலும் பார்க்க

செந்துறை நூலகத்துக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள கிளை நூலகத்துக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. செந்துறை கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அரியலூா்: கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூர... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அரியலூா் மாவட்ட மாணவா் மாநில அளவில் 3-ஆம் இடம்

தமிழ்நாட்டில் நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அமலன் ஆண்டோ மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

ஏரி பகுதி மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்: 50 போ் கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் இருந்த மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 போ் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில்: அரியலூா் அண்ணாசிலை அருகே 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. ரவிச்சந்த... மேலும் பார்க்க