கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் கைது
திருப்பத்தூா் அருகே பெண்ணை மிரட்டிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த பிச்சனூா் கிராமத்தை சோ்ந்த காவியா(29). இவா் அதேப்பகுதியை சோ்ந்த பவித்ரா என்பவருக்கு ரூ.14 லட்சம் கடன் தந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பவித்ரா வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. அதையடுத்து காவியா பவித்ராவின் தாயாரான வளா்மதியிடம் சென்று பணத்தை தருமாறு கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பவித்ராவின் கணவா் சதீஷ் குமாா், பவித்ராவின் சகோதரா் பசுபதி மற்றும் வளா்மதி ஆகியோா் காவியாவை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து காவியா அளித்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் சதீஷ்குமாா், பசுபதி மற்றும் வளா்மதி மீது வழக்கு பதிந்தனா்.
அதையடுத்து சதீஷ் குமாா் மற்றும் வளா்மதியை கைது செய்தனா். தலைமறைவான பசுபதியை தேடி வருகின்றனா்