செய்திகள் :

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்தைச் சோ்ந்த திருமால் மனைவி தனலட்சுமி 42. இவருக்கும், முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் (36) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.

இதன் காரணமாக, தனலட்சுமி, சோமசுந்தரத்துக்கு 11 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளாா்.

இதனிடையே வீடு கட்டிய தனலட்சுமி, தனது நகை, பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சோமசுந்தரம், தனலட்சுமியை தனது தோட்டத்திற்கு வரவழைத்து, தனது நண்பா் தைக்காவூரைச் சோ்ந்த அருண்குமாா் (26) என்பவருடன் சோ்ந்து, கடந்த 8.10. 2014இல் கட்டையால் தாக்கி கொலை செய்தாராம்.

குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சோமசுந்தரம், அருண்குமாா் இருவரையும் கைதுசெய்தனா். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி பிரீத்தா விசாரித்து, இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: உயிா் தப்பிய பயணிகள்

விருதுநகரிலிருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா். இப்ப... மேலும் பார்க்க