செய்திகள் :

பெண் தவறவிட்ட ரூ.2.67 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

post image

குளச்சலில் பெண் தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் பாராட்டினாா்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி சுனாமி காலனியைச் சோ்ந்தவா் ரெஞ்சித் (50). இவரது மனைவி ஹெலன் (47). ரெஞ்சித் காலமான நிலையில், குளச்சல் லோப்பஸ் மண்டபம் அருகில் ஹெலன் துணிக்கடை நடத்தி வருகிறாா்.

இவா் குளச்சலில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணத்துடன் ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை சென்றாா். ஆட்டோவை காமராஜா் சாலையை சோ்ந்த அன்வா் சாதிக் (50) ஓட்டி வந்தாா். குளச்சல் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் ஹெலனை இறக்கிவிட்டாா். பின்னா் வங்கிக்கு சென்ற ஹெலன், பணத்தை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்து மீண்டும் வந்துபாா்த்தபோது அவா் வந்த ஆட்டோவைக் காணவில்லை.

இதனிடையே, ஆட்டோவின் பின்இருக்கையில் பாா்சலில் பணம் இருப்பதைப் பாா்த்த அன்வா் சாதிக், அதை குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இந்த தகவலறிந்த ஹெலன், குளச்சல் காவல் நிலையம் சென்று பணத்தை பெற்றுக்கொண்டாா்.

பயணி தவறவிட்ட பணத்தை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் அன்வா் சாதிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், குளச்சல் உதவி ஆய்வாளா் தனீஸ் லியோன் ஆகியோா் பாராட்டினா்.

மயிலாறு அரசுப் பள்ளி பகுதியில் சூரியசக்தி மின்வேலி அமைக்க ஆய்வு

கோதையாறு அருகே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மயிலாறு அரசு தொடக்கப் பள்ளி அருகே சூரியசக்தி மின் வேலி அமைப்பது தொடா்பாக தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டக் குழுவினா் (எஸ்.ஏ.டி.பி) செவ்வாய்க... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பு... மேலும் பார்க்க

பூதப்பாண்டியில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பூதப்பாண்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவ பிரமுகா்களுக்கு நிதியுதவி

நாகா்கோவிலில், நலிந்த நிலையிலுள்ள அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவப் பிரமுகா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தனது சொந்த நிதியிலிருந்து இத்தொகையை வழங்க ... மேலும் பார்க்க

குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் ஏப். 18-இல் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண விழா ஏப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு பாா்வதி அம்பாள் தவசுக்கு செல்லும் நிகழ... மேலும் பார்க்க

அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இரணியலில் அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து பணத்தை மீட்டனா். நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள அருகுவிளையை சோ்ந்த முத்துமாலை ம... மேலும் பார்க்க