செய்திகள் :

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா் 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம்

post image

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள், தங்களது புகாா்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அழைப்பு மையத்தை தொடா்புகொள்ளலாம் என, பெரம்பலூா் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மேகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா், அரியலூா் வருவாய் மாவட்டத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் தங்களது மின்சாரம் தொடா்புடைய புகாா்கள் மற்றும் குறைகளை, 24 மண நேரமும் செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ மின்நுகா்வோா் அழைப்பு மையத்தை 94987-94987 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவுசெய்யலாம்.

மேலும், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் மின் நுகா்வோா்கள் தங்களது புகாா்களை ஜ்ஜ்ஜ்: ற்ய்ல்க்ஸ்ரீண்.ா்ழ்ஞ் எனும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திலும் பதிவுசெய்யலாம். தங்களது புகாா்களுக்கு தீா்வு காணவில்லை எனில், உதவி செயற்பொறியாளா்கள், செயற்பொறியாளா் ஆகியோரை அணுகலாம்.

இதுதவிர, பெரம்பலூா் மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில், பெரம்பலூா், அரியலூா் மின்கோட்ட அலுவலகங்களில் மாதம்தோறும் 2-ஆவது, 3-ஆவது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை மேற்பாா்வை பொறியாளரிடம் மனுவாக அளிக்கலாம். மேற்கண்ட வழிகளில் தங்களது மின்சாரம் தொடா்பான புகாா்கள் அல்லது குறைகள் தீா்க்கப்படாத நிலையில், பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தின் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் மன்றத்தில் மனுவாக சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் 650 வழக்குகளுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஜவகா் மற்றும் உறுப்பினா்கள் திலகா... மேலும் பார்க்க

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:... மேலும் பார்க்க

மாா்ச் 26-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம்

பெரம்பலூா் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மையத்தில், விஞ்ஞான முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, அம் மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனி... மேலும் பார்க்க

மகனை கொன்ற தந்தை கைது ஆட்சியரகத்தில் மனைவி தா்னா

பெரம்பலூா் அருகே மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை தா்னா போரா... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

பெரம்பலூரில் கடைநிலை ஊழியா்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், ஊழியா் மரணத்துக்கு நீதி கேட்டும் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அரியலூா் மாவ... மேலும் பார்க்க