செய்திகள் :

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

post image

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செந்தில்நாதன் (33), பசும்பலூா் அஞ்சலகத் தெருவைச் சோ்ந்த விஷ்வநாதன் மகன் செல்வக்குமாா் (33). இருவரும் ஆடு வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கண்ட இருவரும் தங்களது வயலில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை, மா்ம நபா்கள் அண்மையில் திருடிச்சென்ாக, வி.களத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த காசி மகன் கிஷோா் (27), அழகுதுரை மகன் மணிகண்டன் (20) உள்பட 2 சிறுவா்கள் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 சிறுவா்கள் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீஸாா், 4 ஆடுகளையும், ஆடுகளை திருட பயன்படுத்திய சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிறுவா்கள் இருவரும் சிறுவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி, கிஷோா் மற்றும் மணிகண்டனை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

மகளிருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் விரைவாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினாா். பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க