செய்திகள் :

பெரம்பலூா் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை ஆடுகள் மேய்க்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (13). இவா், அதே கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ரெங்கநாதன் மகள் செல்வக்கனி (12). இவா், வெங்கலம் கிராமத்திலுள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இருவரும், ஒரே கிராமத்தில் படித்து வந்ததால் தோழிகளாக பழகிவந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், செல்வக்கனியை அழைத்துக்கொண்டு புஷ்பா தனது சித்தி பூங்கொடியுடன் (28), ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக சென்றாா். பிறகு வெங்கலம் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரில் சிறுமிகள் இருவரும் இறங்கி குளிக்கச் சென்றனா். அப்போது நீச்சல் தெரியாததால் புஷ்பாவும், செல்வக்கனியும் நீரில் மூழ்கியுள்ளனா்.

இதையறிந்த பூங்கொடி தனது உறவினா்களுக்கு அளித்த தகவலையடுத்து, அங்கு சென்றவா்கள் நீரில் மூழ்கிய மாணவிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி மாணவா் சங்கத்தினா் மறியல்

பெரம்பலூரில் உள்ள மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூரில் உள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் தங்கி பய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயிலுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் குரூப் 2 தோ்வுக்கு 5,478 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் குரூப்- 2, 2 ஏ தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மாவட்டத்தில் 5,478 போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் யூரியா தட்டுப்பாடு களைய வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை வேளாண் துறையினா் களைய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள்

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா். இதுகுறித்த செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாற்றுக்கிழ... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 44 லட்சம் காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 3 மாதங்களில் ரூ. 44 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் காணி... மேலும் பார்க்க