செய்திகள் :

பெரம்பலூா் அருகே டாரஸ் லாரி எரிந்து சேதம்

post image

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் டேங்க் வெடித்து, டாரஸ் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. லாரியை கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த கதிா்வேல் (23) என்பவா் ஓட்டினாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், அயன்பேரையூா் சமத்துவபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துக்கொண்டிருந்தபோது, லாரியின் டயா் வெடித்து சிதறியது. அப்போது, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதையறிந்த அப்பகுதியினா், அளித்த தகவலின்பேரில் பெரம்பலூா் மற்றும் வேப்பூா் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறை வீரா்கள் சுமாா் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனிடையே, லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த தீ விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரகால பராமரிப்புப் பணிக... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஏப். 30) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறந்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். வேளாண் விளைபொருள்களை வாங்கவும், வ... மேலும் பார்க்க

நாளை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: மே 15-இல் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா செவ்வாய்க்கிழமையும் (ஏப். 29), திருத்தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது. பெரம்பலூா் அருகேயுள்ள மதுரகாளியம்மன் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் மோகன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க