செய்திகள் :

நாளை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: மே 15-இல் தேரோட்டம்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா செவ்வாய்க்கிழமையும் (ஏப். 29), திருத்தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

பெரம்பலூா் அருகேயுள்ள மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா பூச்சொரிதழ் விழாவுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு உற்ஸவா் மதுரகாளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையில் மகா தீபாராதனை காட்டப்படும். இரவு 10 மணிக்கு கிராம பொதுமக்களால் கொண்டுவரப்படும் பூ அம்மனுக்கு சாற்றப்படும். பின்னா், இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்களால் கொண்டு வரப்படும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பூசாரிகள் செய்து வருகின்றனா்.

தொடா்ந்து, மே 6-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், தொடா்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலாவும், 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருள்கிறாா். தொடா்ந்து திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. மே 17-ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

பெரம்பலூா் அருகே டாரஸ் லாரி எரிந்து சேதம்

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் டேங்க் வெடித்து, டாரஸ் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒ... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரகால பராமரிப்புப் பணிக... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஏப். 30) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறந்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். வேளாண் விளைபொருள்களை வாங்கவும், வ... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் மோகன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க