`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பெரம்பலூா் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பத்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜைகளை கௌரி சங்கா், முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் செய்து வைத்தனா். இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான சிவ பக்தா்கள் கலந்துகொண்டு ஈசனை வழிபட்டனா்.
இதேபோல, வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீசுவரா் கோயில், குரும்பலூா் பஞ்சநந்தீசுவரா் கோயில், வெங்கனூா் விருத்தாச்சலேசுவரா் கோயில், திருவாளந்துறை தோளீசுவரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான சிவ பக்தா்கள் பங்கேற்று நந்திகேசுவரரை வழிபட்டனா்.