செய்திகள் :

பெரம்பலூா் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பத்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜைகளை கௌரி சங்கா், முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் செய்து வைத்தனா். இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான சிவ பக்தா்கள் கலந்துகொண்டு ஈசனை வழிபட்டனா்.

இதேபோல, வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீசுவரா் கோயில், குரும்பலூா் பஞ்சநந்தீசுவரா் கோயில், வெங்கனூா் விருத்தாச்சலேசுவரா் கோயில், திருவாளந்துறை தோளீசுவரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான சிவ பக்தா்கள் பங்கேற்று நந்திகேசுவரரை வழிபட்டனா்.

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க