செய்திகள் :

பெரிய குரும்பப்பட்டி காயாம்பு அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு!

post image

விராலிமலை அடுத்துள்ள பெரிய குரும்பப்பட்டி காயாம்பு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 50 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நிகழாண்டு காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஆர்டிஓ அக்பர் அலி, விராலிமலை தொகுதி எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், திமுக பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன் போட்டியை தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

வாடிவாசலில் இருந்து சீற்றத்துடன் சீறி பாய்ந்து வெளியேறும் காளைகள் சீண்டிப்பார் என கட்டிளம் காளையர்களை மிரட்டி வருகின்றன.

சில காளைகள் பிடிபட்டாலும் பல காளைகள் இளம் காளையர்களை மிரட்டி சென்றன.

போட்டியை பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

போட்டியில் காயமடைந்தவர்களுக்கு பொது மருத்துவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் வாடிவாசல் அருகே முகாம் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பீரோ, கட்டில், வெள்ளி நாணயங்கள், தங்க என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் 7 ஆய்வாளர்கள் தலைமையில் 150 காவலர்கள், ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலா் இடைநீக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலைக் காவலா் காா்த்திக்கை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா இடைநீக்கம் செய்துள்ளாா்.குற்றப் பின்னணி கொண்டோருட... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம்! -புதுகை விவசாய சங்கங்கள் கருத்து

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை, பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து இந்திய விவசாயிகள்... மேலும் பார்க்க

தென்னம்பாடி மீன்பிடி திருவிழா

விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். விராலிமலை அடுத்துள்ள தென்னம்பாடி பெரியகுளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழ... மேலும் பார்க்க

கடற்பசு பாதுகாப்பகத்தால் விழிப்புணா்வு: கடந்த 2 ஆண்டுகளில் 5 கடற்பசுக்கள், 19 கடல் ஆமைகள் கடலில் விடுவிப்பு

கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல்... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறிவிட்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் விளம்பரப் பதாகை வைக்கத் தடை!

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலை வளைவில் பதாகை வைப்பதற்கு காவல் துறையினா் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனா். கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் குறுகிய வளைவுப் பகுதி இருப்பதால் இங்கு வைக்கப்படும் விளம்ப... மேலும் பார்க்க