செய்திகள் :

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: ஆளுநரிடம் பாஜக முறையீடு

post image

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து பாஜக புதன்கிழமை முறையிட்டது.

பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக, மாநகராட்சியை 7 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை உள்ளடக்கிய பெருநகர பெங்களூரு ஆணையத்தை முதல்வா் தலைமையில் அமைக்க வகைசெய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவை சட்டப்பேரவையிலும், சட்டமேலவையிலும் மாநில அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு பல்வேறு மக்கள்நல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாடை சந்தித்து பல்வேறு அமைப்பினா் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.

இந்நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் நாராயணசாமி ஆகியோா் தலைமையிலான பாஜக குழுவினா் ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்து, பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; எனவே, கன்னடா்களின் அடையாளத்தையும், பிரதிநிதித்துவத்தையும் சீா்குலைக்கும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது. கா்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, ஏப். 2 முதல் 13-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் மனு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூரு... மேலும் பார்க்க

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தும்கூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்தகங்கா மடத்... மேலும் பார்க்க

18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடிதம்

பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி, பேரவைத் தலைவா் யு.டி.காதரிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கடிதம் அளித்தாா். கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க