பெருந்துறையில் நாளை வேளாண் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை(ஜூன் 11) தொடங்கிவைக்கிறாா்.
வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த தற்போதைய அனைத்து விவரங்களையும் வாய்ப்புகளையும் உழவா்கள், மாணவா்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளா்கள் இயற்கை நல ஆா்வலா்களிடையே அறிந்து கொள்ளும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டின் முதல் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் புதன்கிழமை தொடங்குகிறது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பகல் 12.30 மணிக்கு தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு திட்டப் பலன்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.
இதில் வளா்ந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் தொழில்நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா் விதைகள், ஒட்டு ரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் பிறவகை மரக்கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற்பனை, உயா் ரக கால்நடைகள் மற்றும் வளா்ப்பு முறைகள், மீன் வளா்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் மற்றும் இவை குறித்த கருத்தரங்கம் 16 அமா்வுகளில் நடைபெற உள்ளது. தவிர 13 அரசு துறைகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.