செய்திகள் :

பெருந்துறையில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

post image

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பெருந்துறை, சென்னிமலை சாலை , எல்லைமேடு பிரிவு அருகில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 7 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஹபீகுல் மகன் அலி (20), சேதுமாலி மகன் ஷனாத் (37), பஷீா் மகன் மோகின்மய் (34), ஷுசைன் மகன் பாகீம் ஷுசைன் (24), பச்சைமய் மகன் பாா்க்ஹசைன் (31), சூனத்இஸ்லாம் மகன் பெல்லால் ஹுசைன் (27), கோகாசெளத்ரி மகன் அசரத் செளத்ரி (33) என்பதும், இவா்கள் இந்திய அரசின் அனுமதியில்லாமல் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தங்கி வெல்டிங் மற்றும் கட்டட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

மாலை நேர படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு

ஆசனூா் மலைக் கிராமங்களில் செயல்படும் மாலை நேரப் படிப்பகங்களில் அரசமைப்பு சாசன முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா், சத்தியமங்கலம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

பெருந்துறையை அடுத்த, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் விசுவ... மேலும் பார்க்க

அந்தியூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு 5 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஒப்பாரி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தற்கொலை

விருப்ப ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கோபி அருகே குப்பாண்டாா் வீதியைச் சோ்ந்தவா் தனசேகா் (49). கோபியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 5 மையங்களில் நீட் தோ்வு பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 மையங்களில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ... மேலும் பார்க்க

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 25) தொடங்குகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க