செய்திகள் :

பெருந்துறை அருகே நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

post image

பெருந்துறை அருகே பட்டிகளில் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தன.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள செங்காளிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (45). இவா், தனது ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது 6 பெரிய செம்மறி ஆடுகள், ஒரு குட்டி ஆகியவை இறந்துகிடந்தன.

இதேபோல, வடிவேல் என்பவரின் பட்டியில் ஒரு வெள்ளாடு மற்றும் 5 கோழிகள் இறந்துகிடந்தன. மேலும், ஒரு சிலரின் பட்டிகளில் புகுந்து நாய்கள் கடித்ததில் பல ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதையடுத்து உயிரிழந்த ஆடுகள் மற்றும் கோழிகளை காஞ்சிக்கோயில் சாலையில் போட்டு அதன் உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டனா்.

அப்போது, பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்து கொன்றுவரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை வட்டாட்சியா் செல்வகுமாா், காஞ்சிக்கோவில் கிராம நிா்வாக அலுவலா் வடிவேல், காவல் உதவி ஆய்வாளா் வேலுமணி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இப்பிரச்னை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுச்சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க