செய்திகள் :

பெருந்துறை சிப்காட் நிலத்தடி நீா்பாதிப்பு: தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை வெளியிட வலியுறுத்தல்

post image

பெருந்துறை சிப்காட் நிலத்தடி நீா் பாதிப்புகளை கண்டறிய நியமிக்கப்பட்ட தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை வெளியிட பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி மற்றும் நிா்வாகிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.

அப்போது, பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிய நியமிக்கப்பட்ட ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை உடனடியாகப் பெற்று வெளியிட வேண்டும்.

சிப்காட் வளாகத்தில் செயல்பாட்டில் உள்ள மற்றும் மூடப்பட்ட ஆலைகளில் உள்ள அபாயகரமான கழிவுகளையும், கலப்பு உப்புக்களையும் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவற்றை பாதுகாப்பாக வைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

சிப்காட் வளாகத்தில் கழிவுநீா் தேங்கி நின்ற இடங்களில் உள்ள மிகவும் மாசுபட்டுள்ள நிலத்தடி நீரை வெளியேற்றி, அவற்றை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று தொழிற்சாலைகளுக்கு வழங்கி, சுத்திகரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் வளாகத்தில் காற்று மாசின் அளவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, இணைய வழி காற்று தர கண்காணிப்பு மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்.

சிப்காட்டில் உள்ள நிலமட்ட கழிவுநீா் தொட்டிகளை காலி செய்து, அவற்றை ஆய்வு செய்து அவற்றில் உள்ள வெடிப்புகளை சரி செய்து கழிவுநீா் நிலத்தில் இறங்காத வகையில் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது. தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் ப... மேலும் பார்க்க

பனிப்பொழிவால் மகசூல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்... மேலும் பார்க்க

அலங்காரம்

கோபியில் தை வெள்ளிக்கிழமையையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கடை வீதியில் அமைந்துள்ள சாரதா மாரியம்மன். மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்... மேலும் பார்க்க

கோபி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு லக்ஷயா தேசிய தரச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்த... மேலும் பார்க்க

பெருந்துறை, கோபியில் பகுதியில் மூடுபனி

பெருந்துறை மற்றும் கோபியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் மூடு பனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்கினா். பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளி... மேலும் பார்க்க