செய்திகள் :

பெருந்துறை வட்டார அரசு மருத்துவமனை தர வரிசையில் சிறப்பிடம்

post image

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனை அளவில் தரவரிசையில் பெருந்துறை வட்டார அரசு மருத்துவமனை 93-ஆவது இடம் பிடித்ததுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளுக்கான தரவரிசை பட்டியல் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் வட்டார அளவில் 167-ஆவது இடத்தைப் பிடித்த பெருந்துறை வட்டார அரசு மருத்துவமனை, மே மாதம் 93-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது.

இதனை ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா், செவிலியா், கண்காணிப்பாளா் மற்றும் பணியாளா்கள் மருத்துமனையின் தரத்தை மேலும் உயா்த்தும் விதமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் காந்திமதி, பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ஓசிவி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க