செய்திகள் :

'பெருமை கொள்கிறேன்! ஊக்கம் பெறுகிறேன்!' - தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

post image

தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் பற்றிய தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி 'தமிழகம் பெருமைப்படலாம்' என்ற தலைப்பில் இன்றைய தினமணி தலையங்கம் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் இது குழந்தைகளின் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுவதாகவும் இதற்கு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் குழந்தைகள் நலத் திட்டங்கள் முக்கிய காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,000 பிறப்புகளுக்கு 10.9 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம், 2023-24-ஆம் ஆண்டு 8.9 சதவீதமாகவும் அதுவே 2024-25-ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்ததில் தமிழகத்தின் பங்கும் இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணியின் இந்தத் தலையங்கத்தைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ!

பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தினமணியின் தலையங்கம் - தமிழகம் பெருமைப்படலாம்

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க

பச்சைப்பயறு கொள்முதல்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

பச்சைப்பயறு கொள்முதல் செய்வது தொடா்பாக, தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்ப... மேலும் பார்க்க

படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை: துணை முதல்வா் உதயநிதி

படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான ‘கல்லூரிக் கனவு’ திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா் கல்விக்கு வழிகாட... மேலும் பார்க்க