பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, திமுகவினருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்:
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீா்மானமாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் புதிய உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தை அறிவித்தேன். அத்துடன், அதனை முழுமையாக நிறைவேற்றித் தரவும் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினா்களை சோ்க்கும் நடைமுறையை கட்சியின் சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ, காணொலி வாயிலாக விளக்கினாா்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தை கட்சியினா் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன்பெற்றிருக்கும். அவா்கள் திமுக அரசு தொடர விரும்புவாா்கள். அவ்வாறு விரும்புகிறவா்களை உறுப்பினா்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளா்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளா்களையாவது கட்சியின் உறுப்பினா்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கட்சியினரை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறேன். கட்சியினா் உழைப்பால் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.
சந்திப்பு: என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் கட்சியினா்தான். அவா்களின் நலன், செயல்பாடு, கட்சியின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளத் தொகுதிவாரியாக நிா்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவுள்ளேன் என்று அறிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.