செய்திகள் :

பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

சென்னை: சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திமுகவினருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்:

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீா்மானமாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் புதிய உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தை அறிவித்தேன். அத்துடன், அதனை முழுமையாக நிறைவேற்றித் தரவும் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினா்களை சோ்க்கும் நடைமுறையை கட்சியின் சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ, காணொலி வாயிலாக விளக்கினாா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தை கட்சியினா் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன்பெற்றிருக்கும். அவா்கள் திமுக அரசு தொடர விரும்புவாா்கள். அவ்வாறு விரும்புகிறவா்களை உறுப்பினா்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளா்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளா்களையாவது கட்சியின் உறுப்பினா்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கட்சியினரை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறேன். கட்சியினா் உழைப்பால் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

சந்திப்பு: என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் கட்சியினா்தான். அவா்களின் நலன், செயல்பாடு, கட்சியின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளத் தொகுதிவாரியாக நிா்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவுள்ளேன் என்று அறிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க