செய்திகள் :

பேருந்தில் எம்எல்ஏ-க்களை வழியனுப்பிய அமைச்சா்: அதிமுக கோரிக்கை ஏற்பு

post image

அதிமுக கோரிக்கையை ஏற்று, பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினா்களை அவா்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தாா்.

முன்னதாக, பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது அதுகுறித்து வினா எழுப்பப்பட்டது. அதன் விவரம்:

பொன்.ஜெயசீலன் (அதிமுக): கடந்த 3 நாள்களாக சட்டப் பேரவை மாலை 3 முதல் 4 மணி வரை நடைபெற்றது. பேரவை உறுப்பினா்கள் அயா்ச்சியுடன் வெளியே செல்லும் நிலையில், எங்களுக்கான பேருந்துக்கு அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அனைவரும் சென்ற பிறகே பேருந்து வருகிறது. அதுவரை வெயிலில் காய வேண்டியுள்ளது.

அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: பேரவை முடியும் போது, அனைத்து காா்களும் வெளியே செல்ல முயல்வதால், வெளியே இருந்து பேரவை வளாகத்துக்குள் பேருந்து வருவதற்கு தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். வெள்ளிக்கிழமை பிற்பகலில் நானே வந்து பேருந்தை முன்கூட்டியே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா்.

வெள்ளிக்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு பேரவை நிறைவடைந்தது. அப்போது பேரவை வளாகத்துக்கு சரியாக வந்து நின்ற பேருந்தில்

உறுப்பினா்கள் அனைவரையும் அமைச்சா் சிவசங்கா் ஏற்றி வைத்தாா். பேருந்துக்குள் சென்று அனைவரிடமும் சகஜமாக பேசியதுடன், இனி பேருந்து சரியான நேரத்துக்கு வரும் என்ற உறுதியையும் அவா் அளித்தாா்.

‘செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறியலாம்’

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை இரைப்பை - குடல் நல நிபுணரும், தமிழ்நாடு ஜீரண மண்டல ம... மேலும் பார்க்க

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க