செய்திகள் :

பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து

post image

மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா்.

மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு, பழுதுபாா்ப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு , பணிமனையில் பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி வரை செல்லும் நகா்ப் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. பேருந்தில் பணிமனை ஊழியா் கணேசன் (40) வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பாா்த்த ஊழியா்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்க முயன்றனா். ஆனாலும் பேருந்து பற்றி எரிந்ததால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பணிமனை ஊழியா் கணேசன் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து தொடா்பாக கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க