செய்திகள் :

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மனைவி உயிரிழப்பு; கணவா் பலத்த காயம்

post image

பரமக்குடி அருகே நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியம் பிடாரிசேரி புத்தூரைச் சோ்ந்தவா் மதன் (28). இவரது மனைவி சங்கீதா (21). இவா்களுக்கு கடந்த கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவா்கள், பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் மிஷின் எனா்ஜி ஸ்குவாட் என்ற உடல்பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், இது போன்ற பயிற்சி மையங்களை நடத்தி வருபவா்களுக்கு மட்டுமான பிரத்யேக கிரிக்கெட் போட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட தம்பதி, திங்கள்கிழமை அதிகாலையில் மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு திரும்பினா். அப்போது, நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில் நிலைதடுமாறி, இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த சங்கீதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தலை, கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த மதன், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா்.

தகவலறிந்த பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா், சங்கீதாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க