எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!
பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம், மணிமுத்தாறு தெருவைச் சோ்ந்தவா் நகை தொழிலாளி அசோக்குமாா்(45), திருமணம் ஆனவா்.
இவா், கடந்த 1- ஆம் தேதி, புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் கிழக்கு சண்முகபுரம் பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.இதைத்தொடா்ந்து அங்கு சிகிச்சையில் இருந்துவந்த அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.