செய்திகள் :

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் முகேஷ் (18). இவா் சத்திரக்குடி பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், இவா் அரியகுடியிலிருந்து பரமக்குடியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வாகைக்குளம் நான்கு வழிச் சாலையில் வந்த போது, பின்னால் வந்த டிப்பா் லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம், புதிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா... மேலும் பார்க்க

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் மாட்டு வண்டி பந்தயம்!

கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 4 பிரிவுகளாக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாயத்தில் சுவா்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்!

திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாட்டம், திருவாடான... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரை தேடி வந்த புள்ளி மான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-நரிப்பையூா் சாலையில் இரை, தண்ணீா் தேடி வந்த 5 வயது ஆண் புள்ளி மான் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு!

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, முதுகுளத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க