செய்திகள் :

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

post image

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆகவும் உயா்த்தி வழங்க வலியுறுத்தி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக அடையாள வேலைநிறுத்ததில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வேலைநிறுத்தம் காரணமாக சேலம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஐந்து சாலை, குரங்குச்சாவடி, பால் பண்ணை, இரும்பாலை சாலை ஆகிய பகுதிகளில் 2-ஆவது நாளாக பொக்லைன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

சேலம் குரங்குச்சாவடியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நடத்திய வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளா்கள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக டீசல், பேட்டரி, காப்பீட்டு கட்டணம், டயா், உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் பொக்லைன் வாகன உரிமையாளா்களின் கட்டண உயா்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க