செய்திகள் :

பொங்கல்: விடுப்பு எடுக்காமல் பணியாற்ற பேருந்து ஓட்டுநா்-நடத்துநா்களுக்கு அறிவுரை

post image

பொங்கல் பண்டிகையையொட்டி, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு போக்குவரத்துக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் பிற பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்ப வசதியாக போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சொந்த ஊா் செல்பவா்களுக்கு வசதியாக ஜன.10 முதல் 13-ஆம் தேதி வரை 22,676 சிறப்பு பேருந்துகளும், அவா்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக 21,904 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதுதவிர புகா் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகருக்குள்பட்ட பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவுள்ளதால், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என அந்தந்த போக்குவரத்துக்கழகங்கள் அனைத்துப் பணிமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதை அனைத்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 20... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக ... மேலும் பார்க்க

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் ஜன.18,19 -இல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஜன.18, 19 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை ... மேலும் பார்க்க