செய்திகள் :

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பரமத்தி அங்காளம்மன் கோயில் செல்லும் சாலைக்கு எதிரில் கனி ராவுத்தா் தெரு பகுதியில் ஊா் பொதுக் கிணறு உள்ளது. இக்கிணறு நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. சுமாா் 30 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட இந்த கிணற்றில், பரமத்தி மாரியம்மன், பகவதி அம்மன், அழகு நாச்சியம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக் காலங்களில் பக்தா்கள் குளிப்பது, தீா்த்தம் எடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. தற்போது பல ஆண்டுகளாக இக்கிணறு பயன்பாட்டில் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக இந்த கிணற்றில் இருந்து அவ்வப்போது துா்நாற்றம் வீசியது.

கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கிணற்றில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த பேரூராட்சி பணியாளா்கள் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி துா்நாற்றத்தை போக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும் கிருமி நாசினிகளை தெளித்து சென்றனா்.

ஆனால், திங்கள்கிழமையும் மீன்கள் இறந்து மிதந்ததால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், கிணற்று நீரின் தன்மை மாறிவிட்டதா அல்லது கிணற்றில் யாரேனும் விஷம் கலந்துள்ளனரா என அச்சமடைந்துள்ளனா்.

எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க