செய்திகள் :

பொதுத் தேர்வில் கோட்டைவிட்ட அரசு மாதிரிப் பள்ளி; ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை; பின்னணி என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளில் அதிகமானவர்கள் தோல்வி அடைந்தனர்.

குறிப்பாக, நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தப் பள்ளியில் இருந்து தேர்வு எழுதிய 264 மாணவர்களில், 157 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

107 பேர் தோல்வி அடைந்ததால், தேர்ச்சி விகிதத்தின் (59.47) அடிப்படையில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் கடைசி இடத்தைப் பிடித்தது.

இது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி

இதேபோன்று, 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 107 மாணவர்களில் 36 மாணவர்கள் தோல்வியடைந்து 66 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதேபோல், இந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 59 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 99 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இதனால், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் குறைந்து மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இதன் காரணமாக, பள்ளி நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறந்தாங்கி வர்த்தக சங்கம், மாவட்ட ஆட்சியரிடமும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

அரசு மாதிரிப் பள்ளி என்பது மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பள்ளி. ஆனால், அங்கேயே தேர்ச்சி விகிதம் அதலபாதாளத்துக்குப் போனது பலரையும் கேள்வி எழுப்ப வைத்தது.

இந்நிலையில், அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பாஸ்கர், அந்தோணி ராஜ், பாலச்சந்தர், இளையராஜா, மூர்த்தி, ரவி, ஜெரோம் ஆகிய 7 ஆசிரியர்களைப் பணியிட மாறுதல் செய்தும், அதேபோல் அந்தப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரஞ்சித் என்பவரைப் பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ranjithkumar
ranjithkumar

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரஞ்சித் குமாரைப் பொறுத்தவரையில் அவர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வராமல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால் அவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.இவருக்கு3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.இதன் க... மேலும் பார்க்க

பீகார்: `எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?’ - 'போலி காவல் நிலையம்' நடத்தி வசூல் செய்த மோசடி கும்பல்

பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில் ஒரு மோசடி கும்பல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் போலி காவல் நிலையம் ஒன்றை நடத்திவந்தது தற்போது தெரியவந்துள்ளது. சமஸ்திப்பூர் என்ற பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏ... மேலும் பார்க்க