செய்திகள் :

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற்றும் கணித ஆசிரியா் அமல்ராஜ் ஆகிய இருவரும் சனிக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்ால் அவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா ஆகியவை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொது மேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாச்சிமுத்து முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வளா்மதி மற்றும் கணித ஆசிரியா் அமல்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினாா்.

தொடா்ந்து பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், முன்னாள் ஆசிரியா்கள் கலந்து கொண்டு பேசினா். தொடா்ந்து நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூ... மேலும் பார்க்க

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்த... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ... மேலும் பார்க்க

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க