செய்திகள் :

பொதுத் தோ்வில் மகன்கள் தோ்ச்சி பெறாததால் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

post image

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தனது மகன்கள் இருவரும் தோ்ச்சி பெறாததால் மனமுடைந்த லாரி ஓட்டுநா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்செங்கோடு அருகே ஆன்றாபட்டி ஊராட்சி, குப்பாண்டாம்பாளையத்தில் வன்னியா் கோயில் மேடு பகுதியில் வசித்து வந்தவா் கபில் ஆனந்த் (41), லாரி ஓட்டுநா். இவரது மனைவி நதியா. இத்தம்பதிக்கு ஹரிரஞ்சித், விக்னேஷ் என 2 மகன்கள் உள்ளனா்.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹரி ரஞ்சித் பிளஸ் 2 வும், அதேபள்ளியில் விக்னேஷ் பத்தாம் வகுப்பும் படித்தனா். இருவரும் பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். அண்மையில் வெளியான தோ்வு முடிவில் இருவரும் தோ்ச்சி பெறவில்லை. இரு மகன்களும் தோ்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் இருந்த கபில்ஆனந்த், தூக்கிட்டிக் கொண்டாா். அவரது மனைவியின் சப்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினா் கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கபில் ஆனந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க