செய்திகள் :

பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம்: புகழூா் நகராட்சி தலைவா் உறுதி

post image

பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா் புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரன்.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவா் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் ஹேமலதா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் ரேஷன் கடை அமைக்க வேண்டும், சீரான குடிநீா் விநியோகம் வழங்க வேண்டும், சாக்கடை வசதி செய்து தர வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதற்கு பதில் அளித்து நகராட்சித் தலைவா் குணசேகரன் பேசியதாவது, நகராட்சி வாா்டுகளில் நியாய விலைக் கடை அமைப்பதற்கு தேவையான இடம் இல்லை. சமுதாயக்கூடம் கட்டும்போது அதில் ஒரு சிறிய இடத்தில் நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்ட இடங்களிலும் அடுத்து வரும் ஆண்டுகளில் சாலை வசதி செய்து தரப்படும். மக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும். புகழூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அவா்.

முன்னதாக நகராட்சியின் பணிகள் குறித்த தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில், நகராட்சி உறுப்பினா்கள், நகராட்சி மேலாளா் நாகராஜ், ஆய்வாளா் வள்ளி ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிஎன்பிஎல் ஆலையின் நடமாடும் இலவச மருத்துவ முகாமில் 2,087 நபருக்கு மருத்துவ உதவி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாம் மூலம் 2,087 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆலை அதிகாரி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலையின் சமுதாய மேம்பாட்... மேலும் பார்க்க

கரூரில் மே.1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம்

மே 1-ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 1-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

அனுமதியின்றி நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி பணிகள் நிறுத்தம்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

தரகம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி பணிகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பணிகளை நிறுத்த முடிவெட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யா்மலையைச் சோ்ந்தவா் சண்முக சுந்தரம் (47). இவா் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி குள... மேலும் பார்க்க

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்: பாமக

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. கரூரில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பாமக மாவட்டச் செயலா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் ப... மேலும் பார்க்க

இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லை: குளித்தலை பேருந்துநிலையத்தில் பயணிகள் அவதி

நமது நிருபா்இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாததால் குளித்தலை பேருந்துநிலையத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். கரூா் மாவட்டத்தில் கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்... மேலும் பார்க்க