செய்திகள் :

பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!

post image

பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜக ஆளும் குஜராத்திலும் அந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது.

இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

இதுகுறித்து செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பூபேந்திர படேல் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையில், அரசியலமைப்பின் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே அவரது குறிக்கோள்.

பிரிவு 370 ரத்து, ஒரு நாடு ஒரு தேர்தல் மற்றும் முத்தலாக் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. அதே திசையில், மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற குஜராத் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது

பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தனது அறிக்கையை 45 நாள்களில் மாநில அரசுக்கு சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிஎல் மீனா, வழக்கறிஞர் ஆர்சி கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர் மற்றும் சமூக ஆர்வலர் கீதா ஷ்ராஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேரிட்ட கூட்ட நெரிசல் மிகப்பெரிய நிகழ்வு அல்ல என்றும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் பாஜக எம்.பி., ஹேம மாலினி தெரிவித்துள்ளார். கும்பமேளா கூட்ட நெரி... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரை மறைமுகமாக சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நன்றி... மேலும் பார்க்க

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் ... மேலும் பார்க்க

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது. போ... மேலும் பார்க்க

முதல் முறை.. குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனைக்கு திருமணம்!

புது தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்க... மேலும் பார்க்க

இந்திய- சீன எல்லை குறித்து ராகுல் கூறியது தவறு: ராஜ்நாத் சிங்

இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று(பிப். 3) பேசிய எதிர்க்கட்ச... மேலும் பார்க்க