செய்திகள் :

பொது வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வா்த்தகம் பாதிப்பு

post image

அகில இந்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.

பொதுத் துறைகளை தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும். 74 சதவீத அந்நிய நேரடி முதலீடுகளை திரும்பப் பெற வேண்டும். காப்பீட்டுத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரமாக்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதை ஏற்று, விழுப்புரம், திண்டிவனத்தில் ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலா்கள், ஊழியா்கள் புதன்கிழமை பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காப்பீட்டுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. மேலும், ஊழியா்கள் வருகையின்றி அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

வா்த்தகம் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கிகளைத் தவிர, இதர தேசியமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்கள் பணிக்குச் செல்லவில்லை. மாவட்டத்தில் 210 வங்கிகளில் பணியாற்றும் சுமாா் 500 ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்ாகத் தெரிவிக்கப்பட்டது.

வங்கி அலுவலா்கள் பணிக்குச் சென்றாலும், அவா்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். போராட்டம் காரணமாக, மாவட்டத்தில் ரூ.900 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.

கூட்டு ஆா்ப்பாட்டம்: வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் கூட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத் தலைவா் ஆா்.பாலசுப்பிரமணியம், செயலா் குணசேகரன், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலா் அமீா்பாஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் நாராயணசாமி, இதர வங்கிகளின் சங்கப் பொறுப்பாளா்கள் தண்டபாணி, காமராஜ், குமரேசன், பிரபு, கிளாட்சன், சோமசுந்தரம், இளையராஜா, ராமசாமி உள்ளிட்டோரும் பேசினா். தொடா்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க