ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவா...
பொன்னமராவதியில் சத்துணவு உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு நோ்காணல்
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளா் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் அவற்றை நிரப்புவதற்கு ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக ஏப். 15-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நோ்காணல் நடைபெற்றது. இதில் 23 காலிப் பணியிடங்களுக்கு 55 பேரிடம் மாவட்ட ஊராட்சி செயலா் இளங்கோ தாயுமானவன் தலைமையில் நோ்காணல் நடத்தப்பட்டது. பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் எம். சாந்தா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.