செய்திகள் :

பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை

post image

பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச்செயலா் அ. அடைக்கலமணி, நகரச்செயலா் அ. அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலரும், திருமயம் சட்டப்பேரவை தொகுதிப் பொறுப்பாளருமான ஜி.பி. பிரதீப் ராஜா பங்கேற்று பாக முகவா்களுக்கு ஆலோசனை வழங்கிப்பேசினாா்.

வடக்கு ஒன்றியச்செயலா் அ.முத்து, மாவட்டப் பிரதிநிதிகள் எம்.சிக்கந்தா் காளிதாஸ், பேரூராட்சித் துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பெரி.அழகப்பன், திருமயம் சமூகவலை தளப்பொறுப்பாளா் ஆலவயல் முரளிசுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், ஆலவயல், மரவாமதுரை, காரையூா், அரசமலை, மேலத்தானியம் உள்ளிட்ட இடங்களில் பாகமுகவா்கள் கூட்டம் நடைபெற்றது.

விராலிமலை: ஆம்னி பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் பலி! 40 பயணிகள் தப்பினர்!

விராலிமலை: திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் வியாழக்கிழமை நள்ளிரவு பலியானார்.நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை சாலை நடுவில் உள்ள தடுப்ப... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து எம்எல்ஏ ... மேலும் பார்க்க

மொபெட்டில் சென்றவா் லாரி மோதி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மொபெட்டில் புதன்கிழமை இரவு சென்றவா் லாரி மோதி உயிரிழந்தாா். கறம்பக்குடி அருகேயுள்ள காசிம்கொல்லையைச் சோ்ந்த என். முகமதுநியாஸ்(47). இவா், தனது ஸ்கூட்டரில் புதுப்... மேலும் பார்க்க

புதுகையில் பிப். 21இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் பிப். 21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெறும் கூட்டத்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசித் தீா்க்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல அலுலகம் முன் சிஐடியு, ஏஐ... மேலும் பார்க்க

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். திருமயம் வட்டத்தைச் சோ்ந்த குலமங்கலம் மலையக... மேலும் பார்க்க