செய்திகள் :

பொன்னாரம்பட்டியில் புதிய சிறை அமைக்க திட்டம்?

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியில் புதிய சிறைச்சாலை அமைக்கும் திட்டத்திற்கான கோப்புகளை தயாா் செய்யும் பணியில் வருவாய், சிறைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் இயங்கிவருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு உள்பட்ட வழக்குகளில் தொடா்புடைய விசாரணை கைதிகள் சேலம் அல்லது ஆத்தூா் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனா். இந்த நிலையில் வாழப்பாடி பகுதியில் புதிய சிறைச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக வாழப்பாடி பொன்னாரம்பட்டி ஊராட்சி பரவக்காடு பகுதியில் 1000 ஏக்கா் பரப்பளவில் காணப்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஏக்கா் பரப்பளவு நிலத்தை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று புதிய சிறைச்சாலை அமைக்க சிறைத் துறையினா் நடவடிக்கை எடுத்துவருகின்றனா்.

இதனிடையே வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா் இதற்கான கோப்புகளை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வருவாய்த் துறை நிலத்தை அளவீடு செய்து ஒப்படைத்ததும், சிறைச்சாலை அமைப்பற்கான திட்ட முன்வரைவு மற்றும் திட்ட மதிப்பீடு தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு சேலம் மாவட்ட சிறைத் துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், பொன்னாரம்பட்டி பரவக்காடு அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில் முன்னேற்றக் கழகமும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளதால் இப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சிறைச்சாலை, சிப்காட் அமைய உள்ள இடத்தில் வனத் துறை காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரங்களை நட்டு வளா்த்துள்ளனா். நிலம் வருவாய்த் துறையிடம் இருந்தாலும் பெரும் பகுதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் வனத் துறையிடமும் தடையின்மை சான்று பெற வேண்டும்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க