செய்திகள் :

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

post image

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், பொன்னிற தலைமுடியுடன் பல்மோரல் அருகே தென்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்மோரல் அருகே, அவர் இளவரசர் வில்லியம்ஸுடன் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை தேவாலய பிரார்த்தனைக்காக கேத் மிடில்டன், கணவர் வில்லியம்ஸ் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வந்திருந்தபோதுதான் அவரை மக்கள் பார்த்துள்ளனர். பலரும் அவரைப் பார்த்ததுமே, அவரது பொன்னிற தலைமுடியைத்தான் கவனித்தனர்.

இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டுவிடவில்லை. கடந்த ஆண்டு, கேத் மிடில்டன் தலைமுடி இளம் கருப்பு நிறத்திலிருந்து சற்று வெளிர் நிறத்துக்கு மாறத் தொடங்கியிருந்தது. அண்மையில் ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது கேத் மிடில்டன் தலைமுடி மேலும் வெளிர்த்துக் காணப்பட்டது.

ஆனால், தற்போது அவர் வெளியே வந்தபோது, பொன்னிறத்தில் தலைமுடி இருந்ததைப் பார்த்ததும் மக்கள் அதனை கவனிக்கத் தவறவில்லை.

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ள... மேலும் பார்க்க

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

ஈரான் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 அக்டோபரிலும், மெல்ப... மேலும் பார்க்க

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிண்டி நகரத்தில் இருந்த உணவகம் மற்று... மேலும் பார்க்க

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை வ... மேலும் பார்க்க

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டத... மேலும் பார்க்க