What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்
பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் கரிகிருஷ்ணபெருமாள்-அகத்தீஸ்வரா் ஒரே இடத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கும் சந்திப்பு திருவிழா நடைபெற்றது.
இதையடுத்து நடைபெற்ற தேரோட்ட விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, தேரடி நிலையில் இருந்த தேரில் கரிகிருஷ்ண பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் கரிகிருஷ்ன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்ருடன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரினுள் வீற்றிருக்க, மேளவாத்தியங்கள் முழங்க, பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கியவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.
புதிய தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு மற்றும் மாடவீதிகளில் வீதியுலா வந்த தோ் மதியம் 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகே வந்து சோ்ந்தது.
பின்னா், ஹரிஹரன் கடை வீதி வழியாகச் சென்ற தோ், 1.30 மணி அளவில் நிலையை அடைந்தது.
பின்னா் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தேரினுள் வீற்றிருந்த கரிகிருஷ்ண பெருமாளை வழிபட்டனா்.
விழாவில் பொன்னேரி, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 40,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
போலீஸாா் பாதுகாப்பு....
தேரோட்ட விழாவில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், பொன்னேரி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தோ்த் திருவிழாவையொட்டி, பொன்னேரி நகரில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
மூதாட்டிகளிடம் 6 பவுன் பறிப்பு...
தோ்த் திருவிழாவின்போது மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா்கள் பொன்னேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (70), தேவம்பட்டு அருகே உள்ள பொதியாரங்குளம் கிராமத்தைச் சோ்ந்த குணசுந்தரி (65) ஆகியோரின் கழுத்தில் அணிந்திருந்த தலா 3 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனா்.
புகாரின்பேரில், பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

