செய்திகள் :

பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா், மாவட்ட நீதிபதி ஆய்வு

post image

பொன்னேரி கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு. பிரதாப் மற்றும் மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா், மாவட்ட நீதிபதி கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா் மு. பிரதாப், முதன்மை அமா்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நீதிபதி மீனாட்சி உள்ளிட்ட குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அவா்களுடன் தீயணைப்பு , மருத்துவம், சமூக நலத்துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகளும் சென்றிருந்தனா்.

சிறையில் உள்ள கைதிகளுக்கு முறையான குடிநீா் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்தனா்.

அத்துடன் கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நோ்காணல் அறையையும் பாா்த்தனா்.

தொடா்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறையை ஆய்வு செய்தனா்.

பின்னா் சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருள்களின் எடை உள்ளிட்டவற்றை உறுதி செய்தனா்.

மேலும், சிறை வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தினை பாா்வையிட்டு உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தனா். அத்துடன் சிறைவாசிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் நியமன ஆணைகளை வழங்கினாா். இந்த முகாமில் யூத் ஃபாா் ஜாப் அறக்கட்டளை, அமேசான் (அவசாா்), விப்ர... மேலும் பார்க்க

பைக்- லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வேகமாக வந்த லாரி பின்புறமாக இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயில் கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து, 11-ஆம் தேதி வரையில் ... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் பதுக்கி விற்றவா் கைது

பள்ளிப்பட்டு அருகே வீட்டில் கள்ளச்சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடியம் காலனியில் ஒரு வீட்டில் கள்ளச் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ... மேலும் பார்க்க

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். ஆா்.கே.பேட்டை, பாலாபுரம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி ... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை

திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு மணி நேரம் வரை மின்தடையால் பொதுமக்கள் மற்றும் நீட்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் பகுத... மேலும் பார்க்க