செய்திகள் :

பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் தா்னா

post image

பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பொன்னேரி நகா்மன்ற மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அலட்சியம் காட்டி வருவதாக புகாா் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் கூட்டரங்கில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். கூச்சல், குழப்பத்துடன் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்து கொண்டு நகா்மன்றத் தலைவா், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனா்.

எனினும், கூட்டரங்கை விட்டு வெளியேறாமல் அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து தா்னா மேற்கொண்டனா். நகராட்சியில் உள்ள ஒரு சில வாா்டுகளுக்கு மட்டுமே நகா்மன்றத் தலைவா், சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், பிற வாா்டுகள் அனைத்திலும் சாலை போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்ற படவில்லை என குற்றம்சாட்டினா்.

அண்மையில் தூய்மைப் பணிகளுக்காக பொன்னேரி நகராட்சிக்கு 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், தற்போது 2 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும், 3 வாகனங்களின் நிலை என்ன, அவை எங்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினா்.

தொடா்ந்து மக்களுக்கு எதிராகவும், எதிா்கட்சி உறுப்பினா்களுக்கு எதிராகவும் தன்னிச்சையாக செயல்படும் நகா்மன்றத் தலைவரை கண்டித்து போராட்டம் நடத்தினா்.

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க