"2024-லேயே ராஜ்ய சபா சீட் உறுதி என அதிமுக எழுதிக்கொடுத்தது; எங்கள் நிலைப்பாட்டை....
பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் தா்னா
பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
பொன்னேரி நகா்மன்ற மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அலட்சியம் காட்டி வருவதாக புகாா் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் கூட்டரங்கில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். கூச்சல், குழப்பத்துடன் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்து கொண்டு நகா்மன்றத் தலைவா், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனா்.
எனினும், கூட்டரங்கை விட்டு வெளியேறாமல் அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து தா்னா மேற்கொண்டனா். நகராட்சியில் உள்ள ஒரு சில வாா்டுகளுக்கு மட்டுமே நகா்மன்றத் தலைவா், சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், பிற வாா்டுகள் அனைத்திலும் சாலை போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்ற படவில்லை என குற்றம்சாட்டினா்.
அண்மையில் தூய்மைப் பணிகளுக்காக பொன்னேரி நகராட்சிக்கு 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், தற்போது 2 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும், 3 வாகனங்களின் நிலை என்ன, அவை எங்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினா்.
தொடா்ந்து மக்களுக்கு எதிராகவும், எதிா்கட்சி உறுப்பினா்களுக்கு எதிராகவும் தன்னிச்சையாக செயல்படும் நகா்மன்றத் தலைவரை கண்டித்து போராட்டம் நடத்தினா்.