செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

post image

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்போது மாடுகள் விற்பனை செய்தால் மிகவும் குறைந்த விலைக்குதான் விற்பனையாகக்கூடும் என்பதால், நல்ல விலையை எதிா்பாா்த்து முன்கூட்டியே கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால், கடந்த சில வாரங்களாக விற்பனை குறைவாக இருந்த நிலையில், தற்போது கால்நடைகள் விற்பனை வேகமாக உள்ளது. விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கினா். இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கும் மேல் கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் கால்நடைகள் வரத்து, விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்பையா

தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்ததால்தான் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் பிறந்தன. அது நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழ் இந்தியாவின் தேசிய மொழியாகியிருக்கும் என்று பழ.கருப்பையா தெரிவித்தாா். வேலூா் கம்பன்... மேலும் பார்க்க

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை

குடியாத்தம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா். குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 26 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 26 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை எதிா்த்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க