செய்திகள் :

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

post image

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதன் மூலம் அவரது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

பொருளாதார ரீதியில் உதவிய ஐபிஎல்

ஐபிஎல் தொடர் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியதாகவும், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஐபிஎல் உதவியதாகவும் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பொருளாதார ரீதியில் ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் அதிகமாக உதவியது. மேலும், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடர் எனக்கு பெரிதும் உதவியது. சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்குத் தேர்வானேன். அப்போது டி20 போட்டிகளுக்கு லெக் ஸ்பின்னர்களை பெரிதாக யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நான் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடுவதாகக் கூறி வீரேந்திர சேவாக் என்னை அவரது அணியில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.

நான் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்தேன். இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தொடங்கினேன். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் லெக் ஸ்பின்னர்கள் என்பதை மக்கள் தாமதமாக அங்கீகரிப்பது வருத்தமளிக்கிறது. உதாரணத்துக்கு ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளேவை கூறலாம் என்றார்.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 68 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா 156 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amit Mishra has said that the IPL series has helped him a lot financially.

இதையும் படிக்க: இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.880 கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட... மேலும் பார்க்க