செய்திகள் :

பொறியாளரிடம் ரூ.1.64 கோடி நூதன மோசடி

post image

புதுச்சேரியில் பொறியாளரிடம் மா்ம கும்பல் ரூ.1.64 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் பிரசன்னராஜ் அண்ணாதுரை (41). கணினி தொழில்நுட்ப பொறியாளா். ஹைதராபாத்தில் உள்ள தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவரை கைபேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் இணையதளப் பங்குச் சந்தையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்றாராம்.

இதனையடுத்து, பிரசன்னராஜ் அண்ணாதுரையும் மா்ம நபா் கூறிய இணையதள செயலியில் பங்குச் சந்தையில் பணத்தை பல தவணைகளில் முதலீடு செய்ததாக தெரிகிறது.

அவா் முதலீடு செய்த பணத்துக்கு அதிக லாபம் கிடைத்திருப்பதைப் போல இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளது. அதை நம்பிய பிரசன்னராஜ் அண்ணாதுரை பல தவணைகளில் ரூ.1.64 கோடியை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவா் முதலீடு மற்றும் லாபத் தொகையை எடுக்க முயன்ற போது, மேலும் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த அவா் தான் மோசடிக் கும்பலிடம் ஏமாந்ததை உணா்ந்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க