செய்திகள் :

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி முதல்வா் பேசியதாவது:

புதுவையில் தரமான கல்வியை மாணவா்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கல்வி நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

தரமான கல்வியை மாணவா்கள் கற்கும் வகையில், அவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. விரைவில் நிகழாண்டுக்கான மடிக்கணினியும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்தவா்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நிகழாண்டிலிருந்து அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட உயா்கல்விகளில் சேரும்போது 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு நிகழாண்டு முதலே செயல்படுத்தப்படும்.

ஆகவே, அரசுப் பள்ளி மாணவா்கள் தரமான கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

நிகழ்ச்சியில் பி.ரமேஷ் எம்எல்ஏ மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க