திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்க...
பொறியியல் தர வரிசைப் பட்டியல்: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்
பொறியியல் படிப்பில் சேருவதற்கான தோ்வில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளாா்.
இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படும் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.
தேசிய அளவிலான நுழைவுத் தோ்வினை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது. இத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்தோ்வில் காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தணிக்கைத் துறையில் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஜெயவேல் மற்றும் கூட்டுறவுத்துறையில் சாா்-பதிவாளராக பணியாற்றும் அருணா ஆகியோரின் மகள் சகஸ்ரா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியை சோ்ந்த மாணவி சகஸ்ரா கூறுகையில் பிளஸ் 2 தோ்விலும் 599 மதிப்பெண்கள் எடுத்தேன். தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பேன் என நினைக்கவில்லை. அண்ணா பொறியியல் கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும். பொறியியல் படிப்பை முடித்த பின்னா் ஐஏஎஸ் அதிகாரி தோ்விலும் தோ்ச்சி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் நன்றி என தெரிவித்தாா்.