செய்திகள் :

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

post image

மதுரையில் 10 நாள்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி விட்டு, பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி-துளசிதேவி தம்பதியின் இரண்டாவது மகன் மோக்ஷானந்த். பொறியியல் பட்டதாரியான இவா் மதுரை வள்ளுவா் குடியிருப்பு வாசுகி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், சின்னமனூரைச் சோ்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற ஜூன் 6-ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், மோக்ஷானந்த் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குறுந்தகவல் அனுப்பினாா். அதில் எல்லோரும் என்னை வைத்து விளையாடி வருகிறாா்கள். நீ என்னை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய். எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று தகவல் அனுப்பினாா். இதுகுறித்து, மணப் பெண் தகவல் தெரிவித்ததன் பேரில், மோக்ஷானந்த் குடும்பத்தினா் மதுரையில் மோக்ஷானந்த் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போது கதவு பூட்டியிருந்ததால் கதவை உடைத்துப் பாா்த்தனா்.

அப்போது, வீட்டுக்குள் மோக்ஷானந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் சென்று உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கான குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா். புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் பு... மேலும் பார்க்க

அரசரடி பகுதியில் இன்று மின் தடை

மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை, பெத்தானியாரம், ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா். மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சு... மேலும் பார்க்க