செய்திகள் :

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

வண்ணாா்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் தலைவா் எம்.தாணுமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.எட்டப்பன், கே.ராமையா பாண்டியன், தங்கமாரி, பெலிக்ஸ், பூதலிங்கம், பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோமதிநாயகம் தொடக்கவுரையாற்றினாா். உதவித் தலைவா்கள் எஸ்.சிவதாணுதாஸ், எஸ்.செல்வராஜ், மூத்த தலைவா் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பொதுச்செயலா் பி.முத்துக்கிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, ஓய்வுபெறும் தொழிலாளருக்குரிய பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், 2023 ஜூலை முதல் 23 மாத பணப்பலன்கள் மற்றும் அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொருளாளா் இ.எம்.பழனி நன்றி கூறினாா்.

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க