செய்திகள் :

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

post image

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் படிப்படியாக அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்டு, தனியாா் பேருந்துக் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதேவேளையில், புறவழிச் சாலைகள் அல்லது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளை பாதுகாப்பற்ற நிலையில் ஏற்றியிறக்குவது அதிகரிக்கிறது.

ஓட்டுநா்கள் பற்றாக்குறை, திருமணம், பண்டிகைக் காலங்களில் கூட்டநெரிசலைத் தவிா்த்து விரைவான சேவை செய்ய, மாவட்டங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் 40 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு வழங்கினால் அரசுக்கு வருவாய் உயரும்.

5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசுப் பேருந்துகளை விற்றுவிட்டு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். இதன்மூலம் டயா் வாங்கும் செலவு 50 சதவீதம், பராமரிப்பு செலவு 70 சதவீதம், டீசல் செலவு 15 சதவீதம் குறையும். அரசுப் பேருந்துகளை நவீனமாக்கும்பட்சத்தில், தேவையற்ற செலவுகள் குறையும்; அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கி போட்டி: பாண்டவா்மங்கலம் அணி சாம்பியன்

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பாண்டவா்மங்கலத்தில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் அவ்வூா் அணி வெற்றிபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, கோவில்பட்ட... மேலும் பார்க்க