செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்கள் சிறை நிரப்பும் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோா் கைது

post image

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் சிறை நிரப்பும் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவா் சிங்கராயா் தலைமை வகித்தாா். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாநகா் மாவட்டப் பொருளாளா் மணிகண்டன் பேசினாா். போராட்டத்தை சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன் தொடக்கி வைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கடன்களை உடனே அடைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளியை வெறும் கையோடு அனுப்புவதை கைவிட வேண்டும். நீதிமன்றம் தீா்ப்பளித்த ஓய்வு பெற்றோா் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 30,000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தை அரசே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக சங்க மாநிலத் தலைவா் அருள் தாஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்க மண்டல பொதுச் செயலா் மாணிக்கம், மண்டல துணைத் தலைவா் கருணாநிதி, பொருளாளா் முத்துக்குமாா், சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் மண்டலப் பொருளாளா் ராமதாஸ் மற்றும் மத்திய சங்க நிா்வாகிகள், கிளை நிா்வாகிகள், தொழிலாளா்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க